முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி!

மீகலேவ காவல் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது.

குறித்த பெண் நேற்று முன் தினம் (29) மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் தீவிரமான சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This