Category: பிரதான செய்தி

திருமலை குச்சவெளி இலந்தைக்குளத்தில் இரவோடு இரவாக புத்த விகாரையா?
செய்திகள், பிரதான செய்தி

திருமலை குச்சவெளி இலந்தைக்குளத்தில் இரவோடு இரவாக புத்த விகாரையா?

Uthayam Editor 02- July 27, 2024

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. குச்சவெளி - இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியில் வியாழக்கிழமை (25) இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் புத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வயலுக்கு சென்ற மக்கள், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அவதானித்து மக்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து வெள்ளிக்கிழமை (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்துவருவதாகவும் இந்நிலையில் தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மண்வெட்டிக்காக பிடிக்கம்பு வெட்டினாலே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அரச திணைக்களங்கள் பாரிய இயந்திரங்களினாலும், இயந்திர கை வாள்களினாலும் பாரிய பெரிய மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: நாடாளுமன்றத்தில் கோரிக்கை
செய்திகள், பிரதான செய்தி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: நாடாளுமன்றத்தில் கோரிக்கை

Uthayam Editor 02- July 27, 2024

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார் ரணில்:  கட்டுப்பணமும் செலுத்தப்பட்டது
செய்திகள், பிரதான செய்தி

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார் ரணில்:  கட்டுப்பணமும் செலுத்தப்பட்டது

Uthayam Editor 02- July 26, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா பிணைப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (26) காலை ... Read More

ரணில் – பஸில் இன்று இரவு முக்கிய சந்திப்பு: கொழும்பு அரசியலில் பரபரப்பு
செய்திகள், பிரதான செய்தி

ரணில் – பஸில் இன்று இரவு முக்கிய சந்திப்பு: கொழும்பு அரசியலில் பரபரப்பு

Uthayam Editor 02- July 26, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இரவு விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாறு பஸில் ராஜபக்ஷவிடம் ரணில் கோரியுள்ளார். ... Read More

நாடாளுமன்றத்தையும் கலைக்க உத்தேசம்; மிகப் பெரிய பிரளயங்கள் உருவாகும்
செய்திகள், பிரதான செய்தி

நாடாளுமன்றத்தையும் கலைக்க உத்தேசம்; மிகப் பெரிய பிரளயங்கள் உருவாகும்

Uthayam Editor 02- July 26, 2024

ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் 50 இற்கும் அதிகமான எம்.பிகள் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ... Read More

விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
செய்திகள், பிரதான செய்தி

விடுதலைப் புலிகளை ரணிலே பிளவுப்படுத்தினார்: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

Uthayam Editor 02- July 26, 2024

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பிரதான தேசிய அரசியல் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிளவுப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகச் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் பிளவுப்படுத்தும் ... Read More

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது: விசேட வர்த்தமானி வெளியானது
செய்திகள், பிரதான செய்தி

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது: விசேட வர்த்தமானி வெளியானது

Uthayam Editor 02- July 26, 2024

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று காலை (26) வெளியிட்டது. இதன்படி எதிர்வரும் ... Read More