இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு சாந்தனுக்கு தற்காலிக கடவுச்சீட்டு!

இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு சாந்தனுக்கு தற்காலிக கடவுச்சீட்டு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தன் என்கிற சுதந்திரராஜாவிற்கு இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகத்தினால் குறித்த கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 32 வருடகால சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலையாகி அவருக்கு நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனுக்கு சென்னையில் உள்ள இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகரகம் தற்காலிக பயண ஆவணத்தை வழங்கியுள்ளதாக சென்னை மேல் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதேவேளை, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளாக தண்டனைப்பெற்ற நளினி மற்றும் ஸ்ரீ ஹரன் என்கிற முருகன் ஆகியோர், தங்களை லண்டனில் உள்ள தங்கள் மகளிடம் செல்ல அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This