இந்திய கடற்தொழிலாளர்கள் 23 பேர் கைது!

இந்திய கடற்தொழிலாளர்கள் 23 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 23 கடற்தொழிலாளர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது செல்லப்பட்டனர்.

இதனால் கவலை அடைந்துள்ள தமிழக கடற்தொழிலாளர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This