அரசியல்வாதிகளுக்கு வழங்கிய மதுபானசாலை அனுமதிகளின் விபரங்களை வெளியிடுங்கள், வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது

அரசியல்வாதிகளுக்கு வழங்கிய மதுபானசாலை அனுமதிகளின் விபரங்களை வெளியிடுங்கள், வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடும்படி பல தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். தேசிய மக்கள் சக்தி அரசும் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றதென முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்​தெரிவித்தார்.

அரசியல் வழிகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசிடம் சுமந்திரன் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சமூகப் பிரச்சினை எனவும் அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான உரிமங்களில் அரசியல் தொடர்புள்ள தனிநபர்களின் நிதி ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார்.

CATEGORIES
Share This