தேர்தலில் தோல்வியடைந்தப் பின்னர் புடினுடன் ஏழு முறை பேசிய டிரம்ப்: வெளியான பரபரப்புத் தகவல்

தேர்தலில் தோல்வியடைந்தப் பின்னர் புடினுடன் ஏழு முறை பேசிய டிரம்ப்: வெளியான பரபரப்புத் தகவல்

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் 2021 ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்தார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தோல்வியை தழுவினார்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று டிரம்ப் கூறினார். மேலும் ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில், டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

டொனால்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டப் பின்னர் பல முறை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக அமெரிக்க செய்தியாளர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்பட்டுள்ளது.

புத்தகத்தில் உள்ள தகவல்களின் படி டொனால்டு டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினை ஏழு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஒரு சமயம் தான் பேசுவதை உதவியாளர்கள் கேட்க கூடாது என்ற காரணத்தால் அவர்களை வெளியேற்றிவிட்டு டிரம்ப் புடினுடன் பேசியதாகவும் குறித்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்க செய்தியாளரின் புத்தக்கில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த நிலையில், டொனல்டு டிரம்ப் புத்தகத்தில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். ரஷ்ய தரப்பில் இருந்தும் டிரம்ப்புடன் புடின் தொலைபேசியில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This