பணம் பதுக்கியிருந்தால் கொண்டுவர ராஜபக்‌ஷக்களின் பரம்பரை உதவும்

பணம் பதுக்கியிருந்தால் கொண்டுவர ராஜபக்‌ஷக்களின் பரம்பரை உதவும்

உகண்டா மற்றும் சீஷல்ஸ் போன்ற நாடுகளில் நாங்கள் மறைத்து வைத்திருப்பதாக கூறும் பணத்தை கொண்டுவருவதற்காக தமது முழு பரம்பரையும் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்‌ஷக்களின் பெருமளவு பணம் வெளிநாடுகளில் இருக்கின்றது என்று கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை போன்று வெளிநாட்டில் பணம் இருந்தால் இங்கு வெளிநாட்டு நிதி உதவிகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளும் அவசியம் இருக்காது. வேண்டுமென்றால் சீசெல்ஸ், உகண்டா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்தை கூடிய விரைவில் இங்கு எடுத்து வர இந்த அரசாங்கத்திற்கு முடியுமாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். அப்படி கொண்டுவருவதற்காக எமது கட்சி மற்றும் பரம்பரையின் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றோம் என்றார்.

CATEGORIES
Share This