இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம், 2 வாரங்களை அனுர சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்

இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம், 2 வாரங்களை அனுர சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்

சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன , இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்

சமூக ஊடகபதிவில் எரிக்சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன , இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

அவர் இராஜதந்திர செயற்பாடுகளை மிகச்சரியான முறையில் முன்னெடுத்துள்ளார்.முதலில் இந்திய தூதுவருடன் சந்திப்பு, பின்னர் சீன தூதுவருடன், இதன் முக்கியமான நாடு என பார்த்தால் இந்தியாவிற்கே முதலிடம் அதற்கு பின்னரே சீனா என்ற சமி;க்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அனைத்து நாடுகளினதும் தூதுவர்களை அவர் சந்தித்துள்ளார்.மேற்குலகம் , ரஸ்யா மேலும் பல நாடுகள்.

இலங்கைக்கு முதலிடம் என்ற வெளிவிவகார கொள்கையே பின்பற்றப்படும் என்ற சமிக்ஞையை அவர் வெளியிட்டுள்ளார்.

பதவியேற்றதும் அனுரகுமாரதிசநாயக்க உடனடியாக கண்டியில் தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அவர் அங்கு மகாநாயக்க தேரர்களின் ஆதரவை பெற்றார்.

அதன் பின்னர் அவர் தமிழ் முஸ்லீம் அரசியல் மததலைவர்களை சந்தித்துள்ளார்.

அனைத்து இனசமூகத்திற்குமான இலங்கையை உருவாக்குவதற்கான அவரது வலியுறுத்தல்கள் வலுவானவையாக காணப்படுகின்றன.

அவர் வர்த்தக சமூகத்தினை நோக்கி தனது கரங்களை நீட்டியுள்ளார்,வர்த்தக சமூகத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவதன் மூலமே வளமான இலங்;கையை கட்டியெழுப்ப முடியும்,கல்வி சுகாதாரம் மற்றும் வறியவர்களிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வளங்களை கொண்டுவரமுடியும் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

அவர் ஊழல் அற்ற குழுவினரை அரச அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளார்.அமைச்சர்களி;ற்கு ஆடம்பர கார்களிற்கான சலுகைகளை நிறுத்தியுள்ளார்.அரச தலைவர்களிற்கு ஆடம்பரமற்ற வாழ்க்கை என்பதை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இவை அனைத்தும் இலங்கையின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணப்போவதில்லை.

இடதுசாரி தலைவர் குறித்து இராஜதந்திரிகள் மத்தியி;ல் காணப்படும் சந்தேகத்தை இது போக்காது.

ஆனால் இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம்.

அமைதியான,பலமத, பசுமையான செழிப்பு மிக்க இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு உதவவேண்டும்.

CATEGORIES
Share This