ட்ரெக்டருடன் மோதிய லொறி; சம்பவ இடத்தில் 10 பேர் பலி

ட்ரெக்டருடன் மோதிய லொறி; சம்பவ இடத்தில் 10 பேர் பலி

இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளை முடித்துவிட்டு 13 பேர் ட்ரெட்க்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் பிரயாக்ராஜ் – வாரணாசி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லொறி, ட்ரெக்டர் மீது மோதியுள்ளது.

இதில் ட்ரெக்டர் ட்ரொலியிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
Share This