தரம் 1 இற்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் திருத்தம்!

தரம் 1 இற்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் திருத்தம்!

முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின்படி, சமத்துவமான கல்வியை உறுதிசெய்யும் வகையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், முறைகேடுகளைக் குறைக்கும் வகையிலும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் முறை நடைபெறும் என்று அரசாங்கம் கூறுகிறது.

இதன்படி, கடந்த வருடங்களில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்து 2025 ஆம் ஆண்டு மற்றும் அடுத்த வருடங்களில் திருத்தப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. .

CATEGORIES
Share This