வவுனியாவில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

வவுனியாவில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

வவுனியா தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதிகளில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம்
தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

பல்லகெலே, மஹகனதரவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This