அரசாங்கத்திலிருந்து விலகுமா பொதுஜன பெரமுன: சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்து

அரசாங்கத்திலிருந்து விலகுமா பொதுஜன பெரமுன: சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்து

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கும் ஐ.தே.கவின் யோசனைக்கு பொதுஜன பெரமுன எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிப்பாராயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி என்ற ரீதியில் தங்களது தரப்பினர் தேர்தலை பிற்போடும் யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேர்தலை பிற்போடுவதற்கு தங்களது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This