நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு; தொடர்ந்தும் பயணிகள் ஏமாற்றம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு; தொடர்ந்தும் பயணிகள் ஏமாற்றம்

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்தவைக்கப்பட்டுள்ளது.

‘சிவகங்கை’ கப்பல் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டு மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்ததையடுத்து நாகை செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் கப்பல் கடந்த 11 ஆம் திகதி காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதையடுத்து கடந்த 13ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கப்பல், நாகைக்கு செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (17) முதல் பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே காரணத்தால் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றியமைக்க முடியும் எனவும் கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.l

.

CATEGORIES
Share This