இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலையில் – முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில்

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலையில் – முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில்

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள்இன்றுவரை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர் பதவிகளில் உள்ளனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சியின் செனெட்டர்டேவிட் சூபிரிட்ஜ் இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வு சிட்னியின் டவுன்கோலில் இந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அதில்கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தமிழ்ஈழத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி தருணங்களில் மே 2009 இல்இடம்பெற்றது.சர்வதேசரீதியில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம் அல்ல யுத்த சூன்ய வலயம் தாக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் -பலர் பொதுமக்கள் – பலர் செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்தவர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

170,000தமிழர்கள் அந்த ஈவிரக்கமற்ற யுத்தத்தின் இறுதிகாலங்களில் கொல்லப்பட்டனர்.இந்த குற்றங்களிற்கு காரணமானவர்கள் இன்றும்இலங்கை இராணுவத்திலும் அரசாங்கத்திலும் உயர் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றனர்.

இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.பலர் அவுஸ்திரேலியாஉட்பட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

எங்கள் தேசம் தனதுஇதயத்தை அவர்களிற்காக திறக்கவேண்டும் அவர்களிற்கு நிரந்தர பாதுகாப்பை வழங்கவேண்டும்.

CATEGORIES
Share This