அந்நியச் செலாவணி வருமானம் அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி வருமானம் அதிகரிப்பு!

வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் நாட்டிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் 14 வீத அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியமை, பல்நோக்கு கடன் திட்டத்தை அமுல்படுத்தியமை, ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This