சிவில் விமான சேவைகள் அதிகாரி கொடூரமாக படுகொலை : சந்தேகநபர் கைது!

சிவில் விமான சேவைகள் அதிகாரி கொடூரமாக படுகொலை : சந்தேகநபர் கைது!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று (09) மாலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக பணியாற்றிய 41 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மடபட, பிரியயன்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​தாக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபர், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This