![யாழ். சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது! யாழ். சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/03/arrest-2.jpg)
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது!
முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் யாழ். சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த இவர் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப ஏஜென்சி வேலையை நடத்தி அதன் மூலம் பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியா செல்வதற்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்த போது காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
CATEGORIES பிராந்திய செய்தி