பொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்து சஜித் காட்டம்!

பொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்து சஜித் காட்டம்!

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை. வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது. 4/2 என்பது சமமான வாக்குகள் அல்ல! இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This