கஞ்சாவுடன் பிடிபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

கஞ்சாவுடன் பிடிபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

புத்தளம் பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த 23 ஆம் திகதி புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடைநிறுத்தம் செய்தார்.

கல்பிட்டி – அந்தாங்கண்ணி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

கடந்த 22 ஆம் திகதி மாலை ஏத்தாலை – ஆங்குடா பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சிலர் கஞ்சா குடிப்பதாக நுரச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பிரகாரம் 7 சந்தேகநபர்கள் நுரச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் 1,200 மில்லி கிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 7 சந்தேக நபர்களும் 23 ஆம் திகதி மாலை கல்பிட்டி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து சந்தேகநபர்கள் 1 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This