ஈரான் ஜனாதிபதியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஈரான் ஜனாதிபதியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். நேற்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் ஜனாதிபதி சையத் எப்ராகிம் ரைசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This