மாலைதீவு அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்!

மாலைதீவு அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலைதீவு அமைச்சர்கள் 3 பேரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக மாலைதீவு அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். இது சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த மோடி, லட்சத்தீவு வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரியமான மரபு மற்றும் மக்களுக்கான சான்று. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்பாக தனது பயணம் அமைந்தது.

பிரமிக்க வைக்கும் லட்சத்தீவு அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் பிரமிப்பில் உள்ளேன். அகத்தி, பங்காரம்,கரவட்டி ஆகிய இடங்களில் மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களது உபசரிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இது குறித்து மாலைதீவு அமைச்சர் அப்துல்லா மசூம் மஜீத் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது. மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தார். இது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் மாலைதீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைத்தனர். பலர் தங்களது மாலைதீவு பயணத்தை ரத்து செய்தனர்.

மாலைதீவின் புதிய பிரதமராக முகமது மூயிஸ் கடந்த நவம்பரில் பதவியேற்ற பிறகு, இந்தியா – மாலத்தீவு உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது மூயிஸ் தனது பதிவியேற்றபோது மாலைதீவிலிருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்ற உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This