நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு உள்ளூராட்சி தேர்தல்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு உள்ளூராட்சி தேர்தல்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் 22.08.2024 அன்று வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணைக்குழு முழு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தனது பங்களிப்பை முழுமையாக புரிந்து கொண்டுள்ளதுடன், இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்படுவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

ஆகஸ்ட் 22, 2024 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதன் பங்கைக் கருத்தில் கொண்டு, உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியை விரைவில் நிர்ணயம் செய்ய ஆணைக்குழு கூட உள்ளது.

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Oruvan
CATEGORIES
Share This