கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறையின் பின்னர் கொலை – எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறையின் பின்னர் கொலை – எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கடந்த ஒரு வாரகாலமாக கொல்கத்தாவில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பையும் சேர்ந்த பெண்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை கொல்கத்தாவில் பொலிஸாருக்கும் சிறிய குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்ற மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் மருத்துவமனையின் அவசரசேவை பிரிவை சேதப்படுத்தியுள்ளனர்.

இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகத்தில் ஈடுபட்டனர், சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

கொல்கத்தாவின் ஏனைய பகுதிகளில் இரவில் மொபைபோனின் வெளிச்சத்தினையும்,மெழுகுதிரிiயையும் வேறு வெளிச்சங்களையும் ஏந்தியவாறு பெண்கள் பேரணியாக சென்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீதி வேண்டும் என கோசமிட்டதுடன் சங்கொலியை எழுப்பியுள்ளனர். இரவு 12 மணியானதும் இந்தியாவின் சுதந்திர பிறப்பை குறிக்கும் விதத்தில ஆர்ப்பாட்டத்தின் போக்கு மாறியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.
அதன் பின்னர் கடும் மழையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நாங்கள் இவ்வாறு பெருமளவு பெணகள் அணிவகுத்தை பார்த்ததில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This