தேசியக்கொடி விற்பனை செய்த கடைமீது குண்டு தாக்குதல் – 3 பேர் பலி!

தேசியக்கொடி விற்பனை செய்த கடைமீது குண்டு தாக்குதல் – 3 பேர் பலி!

பாகிஸ்தானில் 77ஆவது சுதந்திரதினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி பலூசிஸ்தானின் குயூடா பகுதியில் உள்ள கடை ஒன்றில் பாகிஸ்தான் தேசியக்கொடி விற்கப்பட்டு வந்தது. இதன்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை விற்பனை செய்ய வேண்டாம் என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த எச்சரிக்கையை மீறி தேசியக்கொடி விற்பனை செய்த கடைமீது நேற்று கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This