மீண்டும் வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரா!; 25 வருட பொதுவுடமை ஆட்சிக்கு எதிர்ப்பு !!

மீண்டும் வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரா!; 25 வருட பொதுவுடமை ஆட்சிக்கு எதிர்ப்பு !!

ஐங்கரன் விக்கினேஸ்வரா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்தன. தற்போது வெனிசுலா அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro) மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது.

வெனிசுலாவில் 25 வருடங்களாக பொதுவுடமைவாத பிஎஸ்யுவி கட்சி (United Socialist Party of Venezuela) ஆட்சியில் உள்ளது. நீண்ட காலமாக அதிபர் பதவியில் இருந்த மறைந்த ஹியூகோ சாவேஸ் 2013-ல் அவர் புற்றுநோயால் மறைந்தார். அதன்பிறகு, நிகோலஸ் மதுரோ அந்நாட்டின் அதிபரானார்.

இந்நிலையில், வெனிசுவேலாவில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய தேர்தல் கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட முடிவுகள், மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

தேர்தல் முடிவுகளை கடந்த 29 ஜூலையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி புறக்கணித்தன.

மீண்டும் அதிபராக நிகோலஸ் மதுரோ:

அதிபர் நிகோலஸ் மதுரோவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கோன்சலஸ் (Edmundo Gonzalez) களமிறங்கி போட்டியிட்டார். இவர்களுக்கிடையே தேர்தலில் நேரடி போட்டி நிலவியது.

வெனிசுலாவில் பல வருடங்களாக பொதுவுடமைவாத கட்சியில் மாற்றம் ஏற்படும் சாத்தியங்கள் உருவாகி உள்ளன. ஆயினும் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

நடந்த தேர்தலில் மதுரோ, 51.2 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எட்முண்டோ கோன்சலெஸ் 44.2 சதவீத வாக்குகளை பெற்றதாவும் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியானது எனவும், தங்களது வேட்பாளர் எட்முண்டோ கோன்சலெஸ், அதிபர் மதுரோவை தோற்கடித்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருக்கிறது என வாதிடுகின்றனர்.

தங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சா 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையும் ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் கோன்சலெஸ் மறுப்பு தெரிவித்தார்.

இதுவரை 80 வீத ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளதில் அதிபர் மதுரோ வெற்றி பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்தல் கவுன்சில் (National Electoral Council) அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல் கவுன்சிலின் (CNE) தலைவர் எல்விஸ் அமோரோசோ, மதுரோவின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது. தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் பலவும் அதிபர் மதுரோவை கோன்ஸாலேஸ் தோற்கடிப்பார் என கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது.

அமெரிக்க எதிர்ப்பும் பெரும் கலவரமும் :

தேர்தலில் அறிவிக்கப்பட்ட முடிவு வெனிசுலா மக்களின் விருப்பத்தையோ அல்லது வாக்குகளையோ பிரதிபலிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பெரும் கலவரம் தற்போது வெடித்துள்ளது. நிகோலஸ் மதுரோ தேர்வானதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராடம் வெடித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் பற்றி சந்தேகங்கள் எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வெனிசுலா புரட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஹியூகோ சாவேஸின் சிலையும் தகர்க்கப்பட்டது.

அத்துடன் வெனிசுலா தேசிய ஆணையர் எல்விஸ் அமோரோச்சோவின் அறிவிப்பை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவ்ர் கோன்சலெஸ் மறுப்பு கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் சவால் :

வெனிசுலா ஜனாதிபதி தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்துள்ளார். சர்வாதிகாரி மதுரோ மீது அவமானம் என்ன ஒரு கேலிக்கூத்து என்றார்.

இதையடுத்து நிகோலஸ் மதுரோ கூறும்போது, வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க். நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் உன்னை கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார்.

இதனை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டு, இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். நான் ஜெயித்தால் நீங்கள் இராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன் என்று விமர்சித்துள்ளார்.

வன்முறையால் பதற்றத்தில் நாடு!

தற்போது நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகரில் மதுரோவுக்கு எதிராக கோஷமிட்ட முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த மதுரோவின் பிரசார சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். பால்கன் மாநிலத்தில் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேசின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடித்தனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கிச் சென்ற வேளை அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய வேளை கலவரம் ஏற்பட்டது.

இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் ஆகிய இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்த தொடர் வன்முறையின்போது 50 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறை, கடந்த 2019ஆம் ஆண்டை நினைவூட்டுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே அதிபர் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஏற்கவில்லை. அதேவேளையில் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

வெனிசுலாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதுரோவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This