விடுதலைப் புலிகள் செய்யாததை ஆசிரியர்கள் செய்கின்றனர் – மனுச நாணயக்கார

விடுதலைப் புலிகள் செய்யாததை ஆசிரியர்கள் செய்கின்றனர் – மனுச நாணயக்கார

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த யுத்தக் காலத்திலும் பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்துகம பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் பதுங்குக் குழிகளுக்குள் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர்.
தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது அவர்களது பலம் எனக் கருதுகின்றனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் பாடசாலைகளை மூடுவதற்கு இடமளிக்கவில்லை. ஆசிரியர்கள் தெய்வங்கள் என்ற நிலைமையை மாற்றி, பாடசாலைக்குச் செல்லாத தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அரசியல் நலனுக்காக அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்குப் பாரிய களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

கட்சி நிற வேறுபாடின்றி ஒரே அரசாங்கத்தில் இணைத்துள்ளோம். இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலைப் பற்றிச் சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This