மின்கட்டணத்தை குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

மின்கட்டணத்தை குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

மின்சார கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய மின்கட்டண திருத்தத்தை நாளை 16 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துமாறு மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதன்டி, 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 61 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்டு மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் 55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன், ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மதஸ்தலங்களுக்கான மின்சார கட்டணங்களை 30 சதவீதம் குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

0-30 அலகுகள் – குறைப்பு ரூ.8 – ரூ.6

31-60 அலகுகள்– குறைப்பு ரூ.20 – ரூ.9

0-60 அலகுகள் – குறைப்பு ரூ.25 – ரூ.15

61-90 அலகுகள் – குறைப்பு ரூ.30 – ரூ.18

91-120 அலகுகள் – குறைப்பு ரூ.50 – ரூ.30

121-180 அலகுகள் – குறைப்பு ரூ.50 – ரூ.42

180 அலகுகள்+ – குறைப்பு ரூ.75 – ரூ.65

CATEGORIES
Share This