அம்பானி வீட்டு திருமணத்தில் அழையா விருந்தாளிகளாக நுழைந்த இருவர்: பொலிஸில் ஒப்படைத்த பாதுகாவலர்கள்

அம்பானி வீட்டு திருமணத்தில் அழையா விருந்தாளிகளாக நுழைந்த இருவர்: பொலிஸில் ஒப்படைத்த பாதுகாவலர்கள்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் திருமணம் பல பிரபலங்கள் முன்னிலையில், வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னணி திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் இத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த திருமணம் நடைபெற்ற நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரும் மேலும் ஒருவரும் திருமணம் நடைபெறும் மண்டபத்துக்குள் அத்து மீறி நுழைந்துள்ளனர்.

இருவரும் சந்தேகத்துக்கிடமான முறையில் திருமண மண்டபத்தில் சுற்றி திரிந்ததால் பாதுகாவலர்கள் அவர்களை வெளியில் அனுப்பியுள்ளனர்.

வெளியே சென்ற இருவரும் மீண்டும் திருட்டுத்தனமாக மண்டபத்துக்குள் நுழைந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த பாதுகாவலர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This