நாளை (15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைகிறது!

நாளை (15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைகிறது!

மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 100 ரூபா கட்டணம் விதிக்கப்படும். இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபா அறவிடப்படும்.
அதேவேளை இரவு 10 மணிக்குப் பிறகு காலை 05 மணி வரை இந்தத் தொகையுடன் 15% சேர்க்கப்படும் அந்த கட்டணத்தை மீட்டரில் கணக்கிடுவதில் உள்ள சிரமங்கள் இருப்பினும், ஏதேனும் அநியாயம் நடந்தால் பயணிகள் பொலிஸாருக்கும் வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கலாம் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This