‘இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்’: சட்டவிரோதமாக தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையர் கைது

‘இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்’: சட்டவிரோதமாக தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையர் கைது

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சக நாட்டவர் ஒருவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் கொலை முயற்சிக்காக அவர் காராபினேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை (15) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 44 வயதான இலங்கையர் பலத்த காயமடைந்துள்ளார்.

கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையின் அடிப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் பெல்லெக்ரினி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 41 வயதான வீடற்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

CATEGORIES
Share This