ரணிலுக்கு ஆதரவு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக முன்னிறுத்தினால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்பது குறித்து கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சகல விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த செயலாளர், கிராம மட்டத்திலிருந்து கட்சியை மீளப் பலப்படுத்தி அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

பல கூட்டணிகள் உருவாகி வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தான் மிகப்பெரிய கூட்டணி உருவாகியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் மத்திய குழு கூடி புதிய அதிகாரி குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக செயற்பட்டு வருகிறார்.” என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

CATEGORIES
Share This