பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்: பேராசிரியர் அமரதுங்க

பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்: பேராசிரியர் அமரதுங்க

2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களையும் பெற்றோர்களையும் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை இனந்தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

“பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்திற்கான வழிமுறையாக செயல்படும் தனித்துவமான ஆவணங்கள். குறியீட்டு எண் உட்பட இந்த ஆவணங்களின் நகல்களைப் பகிர்வது சிலவேளை பாதிப்பாக அமையலாம் .வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது, உதவித்தொகை பெறுவது போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக பலர் இந்தத் தகவலைத் தவறாகப் பயன்படுத்தலாம். உண்மையான உரிமையாளர்களின் தகவல்கள் பிறரால் மாற்றியமைக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறியுள்ளார் .

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பேராசிரியர் அமரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
Share This