கல்முனையில் தீர்வின்றித் தொடரும் தமிழர் போராட்டம்; உயர் அதிகாரிகளின் அடக்குமுறைகளே காரணம்

கல்முனையில் தீர்வின்றித் தொடரும் தமிழர் போராட்டம்; உயர் அதிகாரிகளின் அடக்குமுறைகளே காரணம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளையும் கண்டித்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 ஆவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது.

சில அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தமிழ் மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This