![ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் மற்றொரு சந்திப்பு ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் மற்றொரு சந்திப்பு](https://uthayamnews.com/wp-content/uploads/2024/04/ranil-wickremesinghe-basil.jpg)
ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் மற்றொரு சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக 3 விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் அறிவிக்கப்படும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித விவாதங்களும் இன்றி பொதுவான சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கங்களை முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரசாங்கத்தின் பொது விவகாரங்களில் உத்தியோகபூர்வமாக பங்கேற்பதற்கு முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கட்சி என்ற ரீதியில் தவறான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்க முடியாது என்பது பொதுஜன பெரமுனவின் பொதுவான தீர்மானம் எனவும், எனவே அந்த தவறான முன்னுதாரணம் தொடர்பாக எடுக்க வேண்டிய உத்தியோகபூர்வ நடவடிக்கையில் கட்சி ஏற்கனவே இறங்கியுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.