தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவாரா வேலன் சுவாமிகள்?: விக்னேஸ்வரனிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவாரா வேலன் சுவாமிகள்?: விக்னேஸ்வரனிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவை என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தன்னை வேட்பாளராக களமிறங்குமாறு விக்னேஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவை என வேலன் சுவாமிகள் கோரியுள்ளார்.

எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்றும் பதிலளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This