தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, கேவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 13ஆம் திகதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14, 15ஆம் திகதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This