பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்!

பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்!

சிங்கள, தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வௌ்ளிக்கிழமை (05) முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (லங்காம) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் ஊர்களுக்கு செல்வதற்காக சுமார் 200 கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும், கொழும்பில் இருந்தும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This