வரிகளை செலுத்தாவிட்டால் வங்கி கணக்குகள் பறிக்கப்படும்!

வரிகளை செலுத்தாவிட்டால் வங்கி கணக்குகள் பறிக்கப்படும்!

சுமார் 1000 நிறுவனங்களை அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும் அவ்வாறு செலுத்தாதவிடின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமெனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு இறுதி வரை நிலுவைத் தொகை நிலுவையில் இருந்ததாகவும் எந்த நீடிப்பும் இல்லாமல் ஆறு மாதங்களில் நிலுவைத் தொகையை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சில நிறுவனங்கள் பதிலளித்து தங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.

அத்துடன் வரி செலுத்துவதில் தவறிழைத்த நிறுவனங்கள் நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This