ரயில் திணைக்களத்தின் அறிவிப்பு!

ரயில் திணைக்களத்தின் அறிவிப்பு!

பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை தொடருந்து நிலையம் வரையான பகுதியில் ஒரு பாதைக்கு தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில் பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This