யாழில் 107 வயது முதியவர் உயிரிழப்பு!

யாழில் 107 வயது முதியவர் உயிரிழப்பு!

யாழ். சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு பிறந்த இவர் , தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார்.

உயிரிழந்த முதியவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். அதேவேளை இலங்கையை ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This