சீனா அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 15 போ் உயிரிழப்பு!

சீனா அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 15 போ் உயிரிழப்பு!

சீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் ஜியாங்சு மாகாண தலைநகா் நாஞ்சிங்கில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் மேலும் 44 போ் காயமடைந்தனா்.சீனாவில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படாததால் குடியிருப்புகளில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே,ஜியாங்ஸி மாகாணம், ஜின்யூ நகரில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் 39 போ் உயிரிழந்தனா். அதற்கு முந்தைய 20ஆம் திகதி ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 மாணவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This