இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

122,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 28ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளன.அத்துடன் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 47,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 47,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This