![டிரோன் மூலம் காபி வினியோகிக்கும் ஓட்டல்! டிரோன் மூலம் காபி வினியோகிக்கும் ஓட்டல்!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/02/1-News-Image-187.jpg)
டிரோன் மூலம் காபி வினியோகிக்கும் ஓட்டல்!
நவீனமயமாகி வரும் இன்றைய உலகில் ஓட்டல்களிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பெரிய நகரங்களில் சில ஓட்டல்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ரோபோக்களை சப்ளை பணியில் ஈடுபடுத்துகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு ஓட்டலில் டிரோன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு காபி வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கு சால்ட்லேக் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த வசதியை செய்துள்ளனர்.
இந்த ஓட்டலில் காபியை ஆர்டர் செய்துவிட்டு அருகில் உள்ள இடங்களில் சென்று அமர்ந்துவிடலாம். அவர்களுக்கு டிரோன் மூலம் காபி வினியோகிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஓட்டல் நிர்வாகத்தின் புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
அதில் ஒரு பயனர் இந்த இடம் எனக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், எனக்கு டிரோன் மூலம் இப்படி ஒரு காபி கிடைக்குமா? ஆம் என்றால் நான் வருகிறேன் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.