அதிர்ஷ்ட லாபச் சீட்டில் 340 மில்லியன் டொலர் வென்றவருக்கு பணம் தர மறுப்பு ; நீதிமன்றினை நாடினார்!

அதிர்ஷ்ட லாபச் சீட்டில் 340 மில்லியன் டொலர் வென்றவருக்கு பணம் தர மறுப்பு ; நீதிமன்றினை நாடினார்!

அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் கடந்த ஜனவரி 6ஆம் திகதி பவர்பால் அதிர்ஷ்ட லாபச் சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கு 340 மில்லியன் டொலர் பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்றுஅந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ்.

இதையடுத்து அதிர்ஷ்ட லாபச் சீட்டு அலுவலகத்தில் தன்னுடைய சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், ஜான் சீக்ஸிடம், “உங்கள் எண்ணுக்கு அதிர்ஷ்டம் விழவில்லை. தவறுதலாக உங்கள் எண் குறிப்பிடப்பட்டுவிட்டது. உங்கள் சீட்டை குப்பையில் போடுங்கள். இனி அது பயனற்றது” என்று கூறியுள்ளார்.

இதனால், ஜான் சீக்ஸ் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதையடுத்து தற்போது அந்த அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில்,
“அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிறுவனத்தின் செயல்பாடு அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜான் சீக்ஸுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This