படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 10 கடற்தொழிலாளர்களது 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (18.02.2024) மாலை யாழ்ப்பாணம் கட்டைக்காடு சென் மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி அதிகாலை சுண்டிக்குளம், தொடுவாய் வாய்க்கால் கடலில் கட்டு மரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் இலங்கை கடற்படையின் படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்தொழிலாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வின் பொதுச்சுடரினை கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் ஏற்றி வைத்துள்ளதுடன், இதன்பின்னர் உயிரிழந்த பத்து கடற்தொழிலாளர்களினதும் உறவுகள் ஈகைச்சுடரினை ஏற்றி இறந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இறுதியில் நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றதோடு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்படுள்ளன.

CATEGORIES
TAGS
Share This