EPAPER
பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்: தலைமை தேர்தல் ஆணையர்!

பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்: தலைமை தேர்தல் ஆணையர்!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.

பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This