பாராளுமன்ற தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்!

பாராளுமன்ற தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்!

இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கும் முன் தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.

பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This