ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் நாளை தனித்தீர்மானம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் நாளை தனித்தீர்மானம்!

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நாளை ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்தத் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நாளை முன்மொழிகிறார்.

CATEGORIES
TAGS
Share This