ஜனாதிபதி ரணில் – சரத்பொன்சேகா திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் – சரத்பொன்சேகா திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (07) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பித்து வைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை உரையின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு சுமார் இருபது நிமிடங்கள் நீடித்ததுடன் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரையை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த போதிலும் சரத் பொன்சேகா மற்றும் ராஜித சேனாரத்ன இருவரும் சபையில் தங்கியிருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This