![ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 சமூக ஆர்வலர்கள் கொழும்பில் கைது! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 சமூக ஆர்வலர்கள் கொழும்பில் கைது!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/02/arrest13.jpg)
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 சமூக ஆர்வலர்கள் கொழும்பில் கைது!
முன்னாள் சுகாதார அமைச்சரை கைது செய்யாமைக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர்கள் நேற்று (31) கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
CATEGORIES பிராந்திய செய்தி